முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பிரஹஸ்பதி ஸ்தோத்திரம்

பிரஹஸ்பதி ஸ்தோத்திரம்

ஸ்காந்த புராணத்தில் உள்ள அற்புதமான ஸ்தோத்திரம் இது. இதைப் படிப்பதால் வயிற்றுவலி, குன்மம் முதலான ரோகங்கள் விலகும். பலம், பொருள், ஸந்தானம், தீர்க்காயுள் கிட்டும். பாவங்கள் விலகும். கோசார ரீதியாக 1, 3, 8, 12 ஆகிய இடங்களில் குரு இருந்தாலும், ஜாதகத்தில் தோஷம் உள்ளவனாக இருந்தாலும்... அதனால் ஏற்படக்கூடிய தோஷங்களும் விலகும்.

ஸ்ரீ கணேஸாய நம:
குருர்ப்ருஹஸ்பதிர்ஜீவ: ஸுராசார்யோ விதாம் வர:
வாகீஸோ திஷணோ தீர்கஸ்மஸ்ரு: பீதாம்பரோ யுவா
ஸுதாத்ருஷ்டிர் க்ரஹாதீஸோ க்ரஹபீடாபஹாரக:
தயாகர: ஸெளம்யமூர்த்தி: ஸுரார்ச்ய: குட்மலத்யுதி:
லோகபூஜ்யோ லோககுருர் நீதிக்ஞோ நீதிகாரக:
தாராபதிஸ்சாங்கிரஸோ வேதவேத்ய: பிதாமஹ:
பக்த்யா ப்ருஹஸ்பதிம் ஸ்ம்ருத்வா நாமான்யேதானிய: படேத்
அரோகீ பலவான் ஸ்ரீமான் புத்ரவான் பவேந்நர:
ஜீவேத்வர்ஷஸதம் மர்த்யோ பாபம் நஸ்யதி நஸ்யதி
: பூஜயேத்குருதினே பீதகந்தாக்ஷதாம்பரை:
புஷ்பதீபோபஹாரைஸ்ச பூஜயித்வா ப்ருஹஸ்பதிம்
ப்ராஹ்மணான் போஜயித்வா பீடாஸாந்திர்பவேத் குரோ:

கருத்து:

குருவும், பிரஹஸ்பதியும், ஜீவனும், தேவர்களுக்கு ஆசார்யரும், புத்திமான்களுள் சிறந்தவரும், வாக்குக்கு ஈஸ்வரரும், புத்தி ரூபியும், நீண்ட தாடி, மீசை உள்ளவரும், பீதாம்பரம் தரித்தவரும், யௌவனம் உள்ளவரும்,அமிர்தமயமான பார்வை உள்ளவரும், கிரகங்களுக்குத் தலைவரும், கிரகங்களின் பீடையைப் போக்குகிறவரும், கருணைக்கு இருப்பிடமானவரும், அழகிய உருவம் கொண்டவரும், தேவர்களால் பூஜிக்கத் தகுந்தவரும், மொட்டு போன்ற காந்தியுள்ளவரும்உலகங்களால் பூஜிக்கத் தகுந்தவரும், லோக குருவும், நீதிசாஸ்திரம் அறிந்தவரும், நீதியைச் சொல்கிறவரும், அங்கிரஸ்ஸினுடைய புத்திரரும், வேதங்களால் அறியத் தகுந்தவரும், பிதாமகனுமாகத் திகழும் குருவின் நாமங்களை படிப்பவர்கள் ஆரோக்கியமாகவும், பலவானாகவும், ஸ்ரீமானாகவும், புத்திரவானாகவும் திகழ்வார்கள். அத்துடன், அவர்கள் 100 ஆண்டுகள் ஜீவித்திருப்பார்கள். பாவங்கள் விலகும். எவர் ஒருவர் வியாழக்கிழமையாகிய குருவாரம் அன்று சந்தனம், அக்ஷதம், வஸ்திரம் இவைகளாலும், புஷ்பம், தீபம் முதலான உபகாரங்களாலும் பிரஹஸ்பதியை பூஜிப்பாரோ, அவ்வாறு பூஜித்து பிராமணர்களுக்கு போஜனமும் செய்து வைக்கிறாரோ, அவருக்கு குருவினால் ஏற்பட்ட பீடைகளும் விலகும்.
 நன்றி : சக்தி விகடன் 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஷ கன்னிகா தோஷம்

விஷ கன்னிகா தோஷம் : விஷ கன்னிகா தோஷம் என்றால் என்ன ? ஜாதக ரீதியாக குறிப்பிட்ட கிழமை+திதி+ நட்சத்திரம் இணையும் காலங்களில் பிறக்கும் பெண்கள்  தோஷங்களுக்கு ஆளாகநேரிடும் இவ்வாறு உள்ள ஜாதகி இல்லற வாழ்வில் சுக படமுடியாது துர் பலன் அதிகம் காணப்படும் ஞாயிறு+த்விதீயை+ ஆயில்யம்,: ஞாயிறு+த்தூவதசி+விசாகம்

தானம் செய்ய உகந்த நாள் எது

                            தானம் செய்ய உகந்த நாள் எது தானம் செய்ய உகந்த நாள்:- உங்களுடைய ஜென்ம நட்சத்திரம்,நீங்க பிறந்த நட்சத்திரத்திலிருந்து 3 வது நட்சத்திரம், 6வது நட்சத்திரம், 9வது நட்சத்திரம் நாள்களில் தானம் செய்தால் முழுப்பலன் கிடைக்கும்         ஜென்மநட்சத்திரத்தில் செய்யும் தானம் புகழை தரும் ஏழ்மையை நீக்கும்          3வது நட்சத்திரத்தில் தானம் செய்தால் பகைமை நீங்கும், காரிய சித்தியாகும்,தடைகள் விலகும். 6வது நட்சத்திரத்தில்  தானம் செய்தால் நோய் நிவர்த்தியாகும் , போட்டி பந்தயங்களில் வெற்றி பெறலாம், கடன் தீரும் 9வது நட்சத்திரத்தில் தானம் செய்தால் சொத்து கிடைக்கும், பிரிந்த உறவுகள் இணையும்

அள்ள அள்ளப் பணம் வர எந்த மந்திரம் ஜெபிக்கலாம்

    விநாயகரின் மூல மந்திரம்   ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லெளம் கங்கணபதயே வரவரத ஸ்ர்வ ஜனம்மே வசமினய ஸ்வாஹா   இருபத்தெட்டு அட்சரங்களை உடைய இம்மந்திரம் பலவிதமான சக்திகளையும், சித்திகளையும் அளிக்கவல்லது.செல்வம், பூமி, ஆகர்ஷணம், வசியம், குண்டலி வின்யாசம் முதலிய அனேக சித்திகள் இம்மந்திர ஜபத்தால் கைகூடும். அருகம்புல், தாமரை, வில்வதளம், செவ்வரளி போன்ற நறுமணம் உடைய புஷ்பங்களால் விநாயகரை பூஜை செய்தால் செல்வச் செழிப்பும் ஞானவளமும் கைகூடும். செல்வத்திறவுகோலாக இம்மந்திர உபாசனை நிகழ்ந்து வந்துள்ளது. கணபதியை மட்டும் வழிபடுபவர்கள் கணபதி உபாசகர்கள் என அழைக்கப்படுகிறார்கள். கர்ண வழிபாடு என்று இதைக் கூறுவர். கணபதி உபாசகர்கள் கருப்பு, நீலம் போன்ற வண்ண ஆடைகளை அணிவதைத் தவிர்க்க வேண்டும்.சிவப்பு, பொன் வண்ண உடைகள் மிகவும் ஏற்றவை. துளசியை இவர்கள் கிள்ளக் கூடாது.துளசியை விநாயகருக்கு அணிவிக்கக்கூடாது. கணபதி மந்திரங்களை பிரம்ம முகூர்த்த வேளை எனப்படும் அதிகாலை 4.30 முதல் 6.00க்குள் ஜபிப்பது மிக நன்று என கணேச உத்தர தாயினி உபநிஷத்தில் கூறப்பட்டுள்ளது. விநாய...